13 September 2010

துருக்கி அரசியல் சீர்திருத்தம்பு-மக்கள் கருத்துக்கணிப்பு நிறைவு


1982 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு அடுத்த கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கூடிய பெரும்பாலான திருத்தங்கள் உள்ளடங்கலாக 26 புதிய சீர்திருத்தங்கள் துருக்கி மக்களின் அங்கீகாரத்திற்காக தற்போது காத்திருக்கின்றன. இதற்கிடையில், ஆளுங்கட்சியின் முடிவுகளை தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்திவரும் துருக்கி எதிர்க்கட்சியினர், அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.துருக்கியின் மேனிலை நீதிமன்றங்கள், பிரதமர் எர்துவானின் இஸ்லாமிய அடித்தளம் கொண்ட நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியை கண்காணிக்கும் பொறிமுறையாகவே மதச்சார்பற்ற துருக்கியர்களால் பார்க்கப்படுகின்றன.ஆனால் நீதிமன்றங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட தீர்ப்புகளை வழங்குவதாக பிரதமர் குற்றஞ்சாட்டிவருகின்றார்.இவ்வாறான திருத்தங்களின் பின்னர் பிரதமரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது என அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

02 September 2010

நேபாள பிரதமர் தெரிவில் தொடர்ந்தும் 5ஆவது தடவையாக தோல்வி


நேபாளத்தில் நடைபெற்ற புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான 5 ஆவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. ஐக்கிய நேபாள கம்னியூஸ்ட் கட்சியின் (மவோயிஸ்ட்) தலைவர் பிரச்சண்டா மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் ராமச்சந்திரா பௌதில் ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது இருவரும் போதிய எண்ணிக்கையான வாக்குகளை பெறத் தவறினர். ஐக்கிய நேபாள கம்யூனியூஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) தலைவர் பிரச்சண்டா தனக்கு ஆதரவாக 246 வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக 111 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் 206 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சண்டா தொடர்பான வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. பிரச்சண்டாவை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸின் உப தலைவர் பௌதில் தனக்கு ஆதரவாக 124 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக 243 பேர் வாக்களித்திருந்தனர். 200 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.2007 ஆம் ஆண்டின், நேபாள இடைக்கால அரசியலமைப்பின்படி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் 601 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 வாக்குகளைப் பெறவேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடம் உள்ளது. எம்.பி. பதவியிலிருந்தவர்களில் ஒருவர் இறந்துள்ளதுடன் மற்றுமொருவர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமகவே தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகிறது.

சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டம் - ஒபாமா வலியுறுத்து


நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாம் என இஸ்ரேல் மற்றும் பலஸ்த்தீன தலைவர்களிடம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
புதிய பேச்சுவார்த்தைக்கான ஆதரவை தெரிவித்த பாராக் ஒபாமா, இவ்வாறானதொரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படாது எனவும் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பலஸ்த்தீன தலைவர் முஹம்மத் அபாஸ் ஆகியோருக்கிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முதல் நாள் பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரங்கம் அமைப்பு - நிருபமா ராவ்ப் சந்திப்பு



பத்து கட்சிகளைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கம், நிருபமா ராவுடன் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடியது.மீள் குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசை தூண்டுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவை தமிழ் கட்சிகளின் அரங்கம் கோரியுள்ளது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காண்பதில் ஒரு படியாக, 13ஆவது திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் அமுலாக்குவதன் அவசியத்தை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முன்வைத்ததோடு வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு அரசு சார்பாற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதையும்,பொது மக்கள் வாழும் பகுதியில் இராணுவ குடியிருப்பு முகாம்களை அமைக்கக் கூடாது என்பதையும் ,உயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்ற வேண்டும், சிவில் நிர்வாகம் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதையும் நிருபமா ராவின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



ஏன் இப்படி செய்கிறார்கள்- முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 59ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேசமயம், இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட மேடையில், முன்னாள் கட்சியின் தலைவர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஓவியம் புறக்கக்கணிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்..........................
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த கூட்டத்திற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படுகின்ற கட்சி என்ற ரீதியில் அவர்கள் என்னை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவிதமான அழைப்பிதழும் எனக்குக் கிடைக்கவில்லை. நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த பாரிய பதாதையில் என்னை எதற்காக புறக்கணித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏன் என்மீது விரோதம் காண்பிக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்னிடம் நேரடியாக எதையும் இதுவரை தெரிவிக்கவுமில்லை. அவர் ஏன் என்னை தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.கட்சியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்... தற்போதைய ஜனாதிபதிக்கு எவ்வளவு உதவி செய்தேன் என்று. ஒரு சிலரைத்தவிர ஏனைய உறுப்பினர்கள் அவருக்கு தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி நான் செய்த உதவிக்கு அவர் காட்டும் நன்றிக்கடன் இதுதான் குறிப்பிட்டார்.