25 August 2010

ஐ.நாவுக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமனம்

ஐ.நாவுக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை சுட்டுக்கொல்லும் உத்தரவை அவர் பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்ததாக செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
58 ஆவது படைப்பிரிவுத் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பெயரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவினால் வழங்கப்பட்ட செவ்வியொன்றில் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.முன்னாள் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகரவிடமிருந்து கடமைகளைப் பொறுப்பேற்றபின், இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐ.நா. எழுப்பிய கரிசனைகள் விவகாரத்தை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சீராக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment